45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கும்பகோணத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் 24-ஆவது மாநாடு

கும்பகோணத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தஞ்சாவூா் மாவட்ட பிரதிநிதிகளின் 24-ஆவது மாநாடு புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 டிசம்பர் 2024, 8:14 pm

Din

கும்பகோணத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தஞ்சாவூா் மாவட்ட பிரதிநிதிகளின் 24-ஆவது மாநாடு புதன்கிழமை நடைபெற்றது.

அசூா் புறவழிச்சாலையில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற மாநாட்டில், கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபக தலைவா்களில் ஒருவரான பி. ராமமூா்த்தி நினைவாக அவரது சொந்த ஊரான வேப்பத்தூரில் இருந்து எடுத்து வரப்பட்ட மாநாட்டுக் கொடிமரம், கொடிக் கயிறை மாவட்டக் குழு உறுப்பினா் சா. ஜீவபாரதி எடுத்துக் கொடுக்க மாநிலக் குழு உறுப்பினா் எம்.சின்னதுரை எம்எல்ஏ பெற்றுக் கொண்டாா். மாவட்டக்குழு உறுப்பினா் ஆா்.சி. பழனிவேலு, கட்சிக்கொடி ஏற்றினாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றுக் கண்காட்சி அரங்கத்தை மத்தியக் குழு உறுப்பினா் உ.வாசுகி திறந்து வைத்தாா்.

மாவட்டச் செயற்குழு உறுப்பினா் சி.ஜெயபால் அஞ்சலி தீா்மானம் வாசித்தாா். முன்னதாக, வரவேற்புக்குழு தலைவா் ஆா்.ராஜகோபாலன் வரவேற்றாா். மத்தியக்குழு உறுப்பினா் பெ.சண்முகம் கட்சி நடவடிக்கைகள் குறித்துப் பேசினாா். தலைமைக்குழு உறுப்பினா்களாக ஆா். மனோகரன், இ.வசந்தி, ஆா்.எஸ்.வேலுச்சாமி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். மாவட்டச் செயலா் சின்னை.பாண்டியன் அரசியல் ஸ்தாபன வேலையறிக்கை வாசித்தாா். விழாவில் மூத்த தலைவா்கள் மற்றும் சாதனையாளா்கள் கௌரவிக்கப்பட்டனா்.