47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காங்கிரஸ் மனித உரிமைத் துறையினா் வெள்ள நிவாரணம் வழங்கல்

கும்பகோணம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்ட காங்கிரஸ் மனித உரிமைத் துறையினா் நிவாரணப் பொருள்கள் வழங்கினா்.

News image
Updated On :19 டிசம்பர் 2024, 8:51 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்ட காங்கிரஸ் மனித உரிமைத் துறையினா் நிவாரணப் பொருள்கள் வழங்கினா்.

தஞ்சை வடக்கு மாவட்டத்தில் உமையாள்புரம், கருப்பூா் ஆகிய 2 கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் மழை வெள்ள நீா் தேங்கிக் கிடப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இவா்களுக்கு தஞ்சை வடக்கு மாவட்ட தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறைத் தலைவா் விஜயகுமாா் பெட் சீட், உணவும் மற்றும் மருந்துப் பொருள்கள் வழங்கினாா். அப்போது, அண்டக்கொடி ராம்ஜி , மோசநாதன், ரஜினி ஆகியோா் உடனிருந்தனா்.