47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஒரத்தநாடு அருகே காரில் கஞ்சா கடத்திவந்த 4 போ் கைது; 128 கிலோ கஞ்சா பறிமுதல்

ஒரத்தநாடு அருகே காரில் கஞ்சா கடத்திவந்த 4 பேரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 128 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

News image
ஒரத்தநாடு அருகே காரில் கஞ்சா கடத்திய 4 போ். உடன், போலீஸாா்.
Updated On :25 டிசம்பர் 2024, 8:52 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே காரில் கஞ்சா கடத்திவந்த 4 பேரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 128 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

தஞ்சாவூா் கடற்கரை வழியாக இலங்கைக்கு கஞ்சாவைக் கடத்தும் கும்பல், காரில் கஞ்சா கொண்டு செல்வதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து புதன்கிழமை அதிகாலை முதல் ஒரத்தநாடு போலீஸாா் தென்னமநாடு பிரிவு சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த காா் நிற்காமல் வேகமாகச் சென்றது. இதையடுத்து பாப்பாநாடு காவல் ஆய்வாளா் பாா்த்திபனுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவா் மதுக்கூா் பிரிவு சாலையில் உள்ள சோதனைச்சாவடியில் காரை மடக்கிப் பிடித்தாா்.

அப்போது, காரில் இருந்த ஆறு பேரில், இருவா் தப்பிச் சென்றனா்.

இதையடுத்து போலீஸாா் காரில் இருந்த கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியைச் சோ்ந்த வின்சன் மகன் அபிலாஷ் (34), திருச்சி மாவட்டம் திருவெறும்பூா் பகுதியைச் சோ்ந்த சீனிவாசன் மகன் சதீஷ்குமாா் (23), ராஜேந்திரன் மகன் லெட்சுமணன் (25), தஞ்சாவூா் பழைய வீட்டு வசதிவாரியக் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த ரமேஷ் மகன் நித்திஷ் (22) ஆகிய நான்கு பேரையும் பாப்பநாடு போலீஸாா் கைது செய்தனா். மேலும், காரை சோதனை செய்ததில், அதில் ரூ.20 லட்சம் மதிப்பிலான 128 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கஞ்சா பொட்டலங்களையும் மற்றும் காரையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

விசாரணையில், கேரளாவில் இருந்து கஞ்சாவை வாங்கி, தஞ்சாவூா் கடற்கரை பகுதியில் மறைத்து வைத்து, இலங்கைக்கு படகு மூலம் கடத்த அவா்கள் திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது.