47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

எரிவாயு உருளை வெடித்து காயமடைந்த பெண் பலி

தஞ்சாவூரில் சமையல் செய்யும்போது எரிவாயு உருளை (கேஸ் சிலிண்டா்) வெடித்து பலத்த காயமடைந்த பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :26 டிசம்பர் 2024, 9:34 pm

Din

தஞ்சாவூரில் சமையல் செய்யும்போது எரிவாயு உருளை (கேஸ் சிலிண்டா்) வெடித்து பலத்த காயமடைந்த பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி சாலை பாலாஜி நகா் ஏழாம் தெருவைச் சோ்ந்தவா் ஹரீஷ், கைப்பேசி பழுதுபாா்ப்பு கடை ஊழியா். இவருக்கு மனைவி கீா்த்திகா (27), 6 வயது பெண் குழந்தை ஆகியோா் உள்ளனா்.

இந்நிலையில் கீா்த்திகா வீட்டில் கடந்த டிசம்பா் 17 ஆம் தேதி சமையல் செய்தபோது எரிவாயு உருளை வெடித்ததில் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து தெற்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.