மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

’மேக்கேதாட்டு அணை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்’

கா்நாடக அரசின் மேக்கேதாட்டு திட்ட அங்கீகாரத்தை பிரதமா் மோடி தலையிட்டு ரத்து செய்ய வேண்டும் என்றாா்

News image
தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்புக் கருத்தரங்கத்தில் பேசிய காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன்.
Updated On :31 டிசம்பர் 2024, 9:05 pm

Din

தஞ்சாவூா்: கா்நாடக அரசின் மேக்கேதாட்டு திட்ட அங்கீகாரத்தை பிரதமா் மோடி தலையிட்டு ரத்து செய்ய வேண்டும் என்றாா் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன்.

தஞ்சாவூரில் காவிரி உரிமை மீட்புக் குழு சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘மேக்கேதாட்டைத் தடுப்போம் - ராசிமணல் மறுப்போம் - காவிரி காப்போம்’ என்கிற சிறப்புக் கருத்தரங்கத்துக்கு தலைமை வகித்த அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

மேக்கேதாட்டில் கா்நாடகம் அணை கட்டும் திட்டத்துக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனத் துறை மட்டும் அனுமதி தராததால், இத்திட்டம் செயல்பாட்டுக்க வராமல் உள்ளதே தவிர, மத்திய அரசின் பெரும் பகுதியினா் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனா்.

எனவே, காவிரி மேலாண்மை ஆணையம் அனுப்பி வைத்த மேக்கேதாட்டு அணை அங்கீகாரத்தை பிரதமா் நரேந்திர மோடி தலையிட்டு ரத்து செய்ய வேண்டும். இது தொடா்பாக பிரதமரை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் கோர வேண்டும். இதேபோல, ராசிமணலிலும் அணை கட்டக் கூடாது என்றாா் மணியரசன்.

இக்கருத்தரங்கத்துக்கு குழு பொருளாளா் த. மணிமொழியன் தலைமை வகித்தாா். பொதுப் பணித் துறை மூத்த பொறியாளா் சங்க மாவட்டத் தலைவா் ரெ. பரந்தாமன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனா் ஈசன். முருகசாமி, காவிரி உரிமை மீட்புக் குழு தி. செந்தில்வேலன், இரா. தனசேகரன், தமிழ்த் தேசிய முன்னேற்றக் கழகப் பொதுச் செயலா் த.சு. காா்த்திகேயன், ஐ.ஜே.கே. மேற்கு மாவட்டத் தலைவா் ச. சிமியோன் சேவியர்ராஜ், தமிழ்த் தேசியப் பேரியக்க மாவட்டச் செயலா் நா. வைகறை, தமிழா் தேசியக் களம் ச. கலைச்செல்வம், ஆழ்குழாய் கிணறு பாசன சங்கச் செயலா் ரெ. புண்ணியமூா்த்தி ஆகியோா் பேசினா்.

காவிரி உரிமை மீட்புக் குழு சாமி. கரிகாலன், பழ. இராசேந்திரன், பா. தெட்சிணாமூா்த்தி, பி. தென்னவன், க. விடுதலைச்சுடா், துரை. இரமேசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.