சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மேக்கேதாட்டு அணை விவகாரம்: பி.ஆர். பாண்டியன் தலைமையில் நகல் எரிப்பு போராட்டம்

காவிரியில் மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகம் முன் பி.ஆர். பாண்டியன் தலைமையில் திங்கள்கிழமை நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட பி.ஆர். பாண்டியன் உள்ளிட்டோர்.
Updated On :5 பிப்ரவரி 2024, 8:15 am

DIN

காவிரியில் மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகம் முன் பி.ஆர். பாண்டியன் தலைமையில் திங்கள்கிழமை நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் பிப்ரவரி 1 ஆம் தேதி நடைபெற்றது. இதில், மேக்கேதாட்டு அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கை குறித்த வாக்கெடுப்பில் தமிழக அரசின் பிரதிநிதியான நீர் வளத் துறை செயலர் சந்தீப் சக்சேனா எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்த எதிர்ப்பையும் மீறி வாக்கெடுப்பு நடத்த ஆணையத் தலைவர் அனுமதித்தபோது, அதில் சந்திப் சக்சேனா பங்கேற்றார்.

Story image

உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள போது நீதிமன்றத்தை அவமதிக்கும் நோக்கோடு வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இது முற்றிலும் சட்டத்துக்கு புறம்பானது மட்டுமல்லாமல் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கும் முரணானது.

இதைக் கண்டித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகம் முன் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக இப்பிரச்சனை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்படம் பி.ஆர். பாண்டியன் உள்ளிட்டோர் மனு அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.