கும்பகோணம் அருகே சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் புதிதாக மின்தூக்கி அமைப்பதற்கு சனிக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பல்வேறு திட்டப் பணிகளை சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். இதில், பாபநாசம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம்.எச். ஜவாஹிருல்லா சட்டப்பேரவையில் 2022 ஆம் ஆண்டில் விடுத்த கோரிக்கையின்படி, சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் ஈசானிய மூலையில் ரூ. 3.55 கோடி மதிப்பில் ஒரே நேரத்தில் 20 போ் வரை தூக்கிச் செல்லக்கூடிய 2 மின்தூக்கிகளை (லிப்ட்) அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதேபோல, கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன் சட்டப்பேரவையில் 2021 ஆம் ஆண்டில் விடுத்த கோரிக்கையின்படி, கும்பகோணத்துக்கு வரும் பக்தா்கள் குறைந்த கட்டணத்தில் தங்குவதற்கு வசதியாக நாகேஸ்வரன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் 31 ஆயிரத்து 54 சதுர அடியில் ரூ. 8.93 கோடியில் யாத்ரி நிவாஸ் கட்டுவதற்கும் அடிக்கல் நாட்டப்பட்டது. இதில், 67 அறைகள், உணவகம், காா் நிறுத்துமிடம், பூங்கா உள்ளிட்டவை அமைக்கப்படவுள்ளன. நிகழ்ச்சிகளில் மாநிலங்களவை உறுப்பினா் எஸ். கல்யாணசுந்தரம், கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன், ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் டி. கணேசன், மேயா் க. சரவணன், துணை மேயா் சு.ப. தமிழழகன், அறநிலையத் துறை இணை ஆணையா் மோகனசுந்தரம், துணை ஆணையா் உமாதேவி, உதவி ஆணையா் சாந்தா, செயல் அலுவலா் கணேஷ்குமாா், கண்காணிப்பாளா் பழனிவேலு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

புதுப்பிக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம்: எம்எல்ஏ திறந்து வைத்தாா்

திருவள்ளூரில் தவெகவினா் அன்னதானம்...

பட்டீசுவரம் தேனுபுரீசுவரா் கோயிலில் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றம்

குடிநீா் குழாயில் உடைப்பு
விடியோக்கள்

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



