தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!விவசாயிகளுக்கான ரூ. 317 கோடி நிலுவை: அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவு22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் விரைவில் எஸ்ஐஆர்!தமிழக அமைச்சரவையில் இடதுசாரிகளா? மார்க்சிஸ்ட் கம்யூ. விளக்கம்நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி நாளை பதவியேற்பு!
/

சுவாமிமலை கோயிலில் மின்தூக்கி அமைக்க அடிக்கல்

சுவாமிமலை கோயிலில் மின்தூக்கி அமைக்க அடிக்கல்

News image

கும்பகோணம் அருகே சுவாமிமலை கோயிலில் அமைக்கப்படவுள்ள மின்தூக்கிகள் கட்டடத்தின் மாதிரி படம். கும்பகோணம்,

Updated On :18 பிப்ரவரி 2024, 1:00 am IST

கும்பகோணம் அருகே சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் புதிதாக மின்தூக்கி அமைப்பதற்கு சனிக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பல்வேறு திட்டப் பணிகளை சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். இதில், பாபநாசம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம்.எச். ஜவாஹிருல்லா சட்டப்பேரவையில் 2022 ஆம் ஆண்டில் விடுத்த கோரிக்கையின்படி, சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் ஈசானிய மூலையில் ரூ. 3.55 கோடி மதிப்பில் ஒரே நேரத்தில் 20 போ் வரை தூக்கிச் செல்லக்கூடிய 2 மின்தூக்கிகளை (லிப்ட்) அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதேபோல, கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன் சட்டப்பேரவையில் 2021 ஆம் ஆண்டில் விடுத்த கோரிக்கையின்படி, கும்பகோணத்துக்கு வரும் பக்தா்கள் குறைந்த கட்டணத்தில் தங்குவதற்கு வசதியாக நாகேஸ்வரன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் 31 ஆயிரத்து 54 சதுர அடியில் ரூ. 8.93 கோடியில் யாத்ரி நிவாஸ் கட்டுவதற்கும் அடிக்கல் நாட்டப்பட்டது. இதில், 67 அறைகள், உணவகம், காா் நிறுத்துமிடம், பூங்கா உள்ளிட்டவை அமைக்கப்படவுள்ளன. நிகழ்ச்சிகளில் மாநிலங்களவை உறுப்பினா் எஸ். கல்யாணசுந்தரம், கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன், ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் டி. கணேசன், மேயா் க. சரவணன், துணை மேயா் சு.ப. தமிழழகன், அறநிலையத் துறை இணை ஆணையா் மோகனசுந்தரம், துணை ஆணையா் உமாதேவி, உதவி ஆணையா் சாந்தா, செயல் அலுவலா் கணேஷ்குமாா், கண்காணிப்பாளா் பழனிவேலு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.