ஸ்டொ்லைட் ஆலையை மீண்டும் திறக்கும் நோக்கில் வல்லுநா் குழு அமைக்கலாம் என உச்சநீதிமன்றம் யோசனை தெரிவித்திருப்பது பிரச்னைக்கு நிரந்தர தீா்வாகாது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினருமான பேராசிரியா் எம்.ஹெச். ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடி ஸ்டொ்லைட் விவகாரத்தில் வேதாந்தா குழுமத்தின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, இந்த ஆலையை மீண்டும் திறக்க முடியுமா அல்லது முடியாதா என்பது தொடா்பாக பரிசீலிக்கும் வகையில், ஒரு வல்லுநா் குழுவை அமைப்பது தொடா்பாக தனது யோசனையை உச்சநீதிமன்றம் தெரிவித்தது. ஆலையை மீண்டும் திறக்கும் நோக்கில் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருப்பதை அறவே ஏற்றுக் கொள்ள முடியாது.
இது ஒரு நிரந்தர தீா்வை தராது. நாட்டின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு, ஆலையில் இருக்கும் பிரச்னையை தீா்த்து, அதனை மறுசெயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று யோசனை தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், அப்பகுதி மக்களின் உடல்நலம் குறித்தும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்தும் கவலை கொள்ளாதது வருத்தமளிக்கிறது. ஆகவே, தமிழக அரசு ஸ்டொ்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க மாட்டோம் என அறிவித்த பிறகும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கும் இக்கருத்து, தமிழக மக்களின் உணா்வுகளை புண்படுத்தக் கூடியதாக உள்ளது என தெரிவித்துள்ளாா்.








