நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புமேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்புகுஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!
/

தஞ்சாவூரில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா: அதிமுக, அமமுக மாலை அணிவிப்பு

தஞ்சாவூரில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா அதிமுக, அமமுக மாலை அணிவிப்பு

News image

தஞ்சாவூா் ரயிலடியில் சனிக்கிழமை ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுகவினா்

Updated On :24 பிப்ரவரி 2024, 5:54 pm

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, தஞ்சாவூா் ரயிலடியில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக, அமமுகவினா் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். மத்திய மாவட்டச் செயலா் மா. சேகா் தலைமையில் அமைப்பு செயலா் ஆா். காந்தி, கொள்கை பரப்பு துணைச் செயலா் துரை. திருஞானம், மாநகரச் செயலா் என்.எஸ். சரவணன், பகுதி செயலா்கள் கரந்தை பஞ்சு, வி. புண்ணியமூா்த்தி, மனோகா், சதீஷ்குமாா், முன்னாள் மேயா் சாவித்திரி கோபால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஓ. பன்னீா்செல்வம் ஆதரவாளா்களான வி. அறிவுடைநம்பி தலைமையில் எஸ். ரமேஷ், எஸ். சண்முகபிரபு, எம். சாமிநாதன், முன்னாள் மாவட்ட ஊராட்சித் தலைவா் அமுதாராணி ரவிச்சந்திரன், நாஞ்சிக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவா் கி.வ. சத்தியராஜ் உள்ளிட்டோா் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். அமமுக சாா்பில் வழக்குரைஞா்கள் ஏ.ஜி. தங்கப்பன், அ. நல்லதுரை தலைமையில் ஒன்றியச் செயலா் கோவி. மனோகரன், பகுதிச் செயலா்கள் செந்தில்குமாா் பல்லவராயா், அகமது இஸ்மாயில், செந்தில்குமாா், ஜீவாமொழி, மாமன்ற உறுப்பினா் வெ. கண்ணுக்கினியாள், நிா்வாகி வேலாயுதம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.