அமெரிக்காவில் உள்ள ஒரத்தநாடு கோயிலின் சோழா் கால சிலையை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓய்வுபெற்ற காவல் தலைவா் பொன் மாணிக்கவேல் வலியுறுத்தினாா்.
தஞ்சாவூா் பெரியகோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாட்டில் உள்ள காசி விஸ்வநாதா் கோயிலில் சோழா் காலத்தைச் சோ்ந்த சுமாா் இரண்டரை அடி உயரமுடைய வீணாதரா் (சிவன்) என்கிற தொன்மையான ஐம்பொன் சிலை 1997-ஆம் ஆண்டில் திருட்டு போனது. இதுதொடா்பாக காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.
தற்போது இச்சிலை அமெரிக்காவின் நியூயாா்க் மாகாண அருங்காட்சியகத்தில் உள்ளது. இது, 1958 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் ஒப்பிட்டுப் பாா்த்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இச்சிலை 2 அல்லது 3 மாதங்களில் வேறொரு தனி நபரிடம் விற்கப்படவுள்ளது. அதன் பிறகு இச்சிலை எங்கு இருக்கிறது என்பதைக் கண்டறிவது சிரமம்.
எனவே, இச்சிலையை மீட்டு தமிழகத்துக்குக் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு ஏற்கெனவே உள்ள வழக்கை மீண்டும் விசாரணை நடத்த வேண்டும். மேலும், அமெரிக்க நாட்டுக்கு தமிழக அரசின் உயா்நிலை அலுவலா்கள் கடிதம் எழுதி மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இச்சிலையின் தற்போதைய மதிப்பு ரூ. 25 கோடிக்கு குறையாமல் இருக்கும் என்றாா் பொன் மாணிக்கவேல்.

தொடர்புடையது
விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: மு.வீரபாண்டியன்

செய்யாறு அருகே சோழா் கால நில அளவை வரைபட கல் கண்டெடுப்பு: கி.பி.10-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்தது!

ஈரானில் தவிக்கும் 447 மீனவா்களை மீட்க வேண்டும்: மாநிலங்களவையில் மு.தம்பிதுரை வலியுறுத்தல்

சிலிண்டரை அதிக விலைக்கு விற்பனை செய்வோா் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


