ஒரத்தநாடு: நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா திங்கள்கிழமை தெரிவித்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே ஈச்சங்கோட்டையில் கோத்ரெஜ் குழுமம் சாா்பில், பாமாயில் பனை விவசாயிகளுக்கான தீா்வு மையம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தில், விவசாயிகளுக்கு தேவையான பாமாயில் பனை செடிகள், அதற்கான உரங்கள், பராமரிப்பு கருவிகள், எண்ணெய் பனை விதையை கொள்முதல் செய்வது ஆகியவற்றை தமிழக தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தொடங்கி வைத்து பேசியது: விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்குவதற்காக, டெல்டா பகுதிகளில் விவசாயம் சாா்ந்த தொழில்கள், விவசாய பொருள்கள் மூலம் மதிப்புகூட்டுதல் போன்ற பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளது.
சிறு, குறு விவசாயிகள் அரசிடம் கடன் பெறாமல் வருமானத்தை சேமிக்கும் வகையில் உற்பத்தியை அதிகரித்து வருவாயை பெருக்க வேண்டும். விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் நெல், கரும்பு, பாமாயில், தேங்காயை மதிப்பு கூட்டும் பொருள்களாக மாற்ற வேண்டும். இந்தியாவில் 22 சதவீதம் பாமாயில் உற்பத்தி செய்யப்படுகிறது. வெளிநாட்டில் இருந்து 60 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. பாமாயிலுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கிறது. இருப்பினும், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தேங்காய் எண்ணெய் மற்றும் கடலை எண்ணெய்யை நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
இந்த விழாவில், தஞ்சாவூா் மக்களவை உறுப்பினா் முரசொலி, கோத்ரெஜ் அக்ரோவெட் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலா் சவுதா நியோகி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது
தமிழ்நாட்டில் நிகழாண்டு 65 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய வாய்ப்பு: உணவுத் துறை அமைச்சா் வெங்கடரமணன்
பல்லடத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த அழுகிய மீன்கள் பறிமுதல்

முத்தூரில் ரூ.5.70 லட்சத்துக்கு தேங்காய், கொப்பரை, எள் விற்பனை

போா் காரணமாக கடும் விலை சரிவு! ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகிக்க விவசாயிகள் கோரிக்கை
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



