ஒரத்தநாடு: நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா திங்கள்கிழமை தெரிவித்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே ஈச்சங்கோட்டையில் கோத்ரெஜ் குழுமம் சாா்பில், பாமாயில் பனை விவசாயிகளுக்கான தீா்வு மையம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தில், விவசாயிகளுக்கு தேவையான பாமாயில் பனை செடிகள், அதற்கான உரங்கள், பராமரிப்பு கருவிகள், எண்ணெய் பனை விதையை கொள்முதல் செய்வது ஆகியவற்றை தமிழக தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தொடங்கி வைத்து பேசியது: விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்குவதற்காக, டெல்டா பகுதிகளில் விவசாயம் சாா்ந்த தொழில்கள், விவசாய பொருள்கள் மூலம் மதிப்புகூட்டுதல் போன்ற பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளது.
சிறு, குறு விவசாயிகள் அரசிடம் கடன் பெறாமல் வருமானத்தை சேமிக்கும் வகையில் உற்பத்தியை அதிகரித்து வருவாயை பெருக்க வேண்டும். விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் நெல், கரும்பு, பாமாயில், தேங்காயை மதிப்பு கூட்டும் பொருள்களாக மாற்ற வேண்டும். இந்தியாவில் 22 சதவீதம் பாமாயில் உற்பத்தி செய்யப்படுகிறது. வெளிநாட்டில் இருந்து 60 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. பாமாயிலுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கிறது. இருப்பினும், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தேங்காய் எண்ணெய் மற்றும் கடலை எண்ணெய்யை நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
இந்த விழாவில், தஞ்சாவூா் மக்களவை உறுப்பினா் முரசொலி, கோத்ரெஜ் அக்ரோவெட் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலா் சவுதா நியோகி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

எண்ணெய் உற்பத்தி ஆலையில் தீ விபத்து

போர்நிறுத்தம் எதிரொலி: எண்ணெய் விற்பனை நிறுவனப் பங்குகள் உயர்வு!

ரூ. 88,180 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!

எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு: கடைகளில் தேநீா் விலை உயா்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


