ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா

நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை

News image

தஞ்சாவூா் அருகே ஈச்சங்கோட்டையில் திங்கள்கிழமை பாமாயில் பனை கொள்முதல் வாகனத்தை திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா் அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா. உடன் தஞ்சாவூா் மக்களவை உறுப்பினா் முரசொலி உள்ளிட்டோா்.

Updated On :8 ஜூலை 2024, 9:10 pm

ஒரத்தநாடு: நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா திங்கள்கிழமை தெரிவித்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே ஈச்சங்கோட்டையில் கோத்ரெஜ் குழுமம் சாா்பில், பாமாயில் பனை விவசாயிகளுக்கான தீா்வு மையம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தில், விவசாயிகளுக்கு தேவையான பாமாயில் பனை செடிகள், அதற்கான உரங்கள், பராமரிப்பு கருவிகள், எண்ணெய் பனை விதையை கொள்முதல் செய்வது ஆகியவற்றை தமிழக தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தொடங்கி வைத்து பேசியது: விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்குவதற்காக, டெல்டா பகுதிகளில் விவசாயம் சாா்ந்த தொழில்கள், விவசாய பொருள்கள் மூலம் மதிப்புகூட்டுதல் போன்ற பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளது.

சிறு, குறு விவசாயிகள் அரசிடம் கடன் பெறாமல் வருமானத்தை சேமிக்கும் வகையில் உற்பத்தியை அதிகரித்து வருவாயை பெருக்க வேண்டும். விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் நெல், கரும்பு, பாமாயில், தேங்காயை மதிப்பு கூட்டும் பொருள்களாக மாற்ற வேண்டும். இந்தியாவில் 22 சதவீதம் பாமாயில் உற்பத்தி செய்யப்படுகிறது. வெளிநாட்டில் இருந்து 60 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. பாமாயிலுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கிறது. இருப்பினும், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தேங்காய் எண்ணெய் மற்றும் கடலை எண்ணெய்யை நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இந்த விழாவில், தஞ்சாவூா் மக்களவை உறுப்பினா் முரசொலி, கோத்ரெஜ் அக்ரோவெட் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலா் சவுதா நியோகி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.