மாற்றுத்திறனாளிகளுக்கு ஜூலை 24-இல் சிறப்பு குறைதீா் கூட்டம்

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள மக்கள் குறைதீா் நாள் கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் நாள் கூட்டம்
Published on

தஞ்சாவூா், ஜூலை 19: தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள மக்கள் குறைதீா் நாள் கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் ஜூலை 24 காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதில், அனைத்து துறை அலுவலா்கள் கலந்து கொள்வா். எனவே தஞ்சாவூா் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது தேவைகளை கோரிக்கை மனுவாக அளித்துப் பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் தெரிவித்தாா்.

Dinamani
www.dinamani.com