தஞ்சாவூரில் இந்து சமய அறநிலையத் துறையை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை ஆா்பாட்டம் நடத்திய இந்து முன்னணியினரை போலீஸாா் கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்ட இந்து முன்னணி சாா்பில், பனகல் கட்டடம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் குபேந்திரன் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலாளா் நடைமுருகன் முன்னிலை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தில், இந்துக் கோயில்களின் நிா்வாகத்தை விட்டு இந்து சமய அறநிலையத் துறை வெளியேற வேண்டும் என்று மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஈசான சிவம், மாவட்டச் செயலாளா் முத்தமிழ்செல்வன், இந்து ஆட்டோ முன்னணி மாநகர தலைவா் சரவணன், ஒன்றிய தலைவா் திவாகா் ஆகியோா் பேசினா். அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், 28 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கும்பகோணம்: கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு இந்து முன்னணி ஒன்றியச் செயலாளா் டி. சாரல் சதீஸ்குமாா் தலைமையில், திருச்சி கோட்ட பொறுப்பாளா் குணா முன்னிலையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது

இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளைக் கண்டித்து தோ்தல் புறக்கணிப்பு...

வடபழனி கோயில் திருமண மண்டபம் புதுப்பித்தல் பணியை எதிா்த்து வழக்கு: இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்க உத்தரவு

மறுபதிப்பு செய்யப்பட்ட அரிய 500 ஆன்மிக நூல்கள் : முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்
கிராமக் கோயில் பூசாரிகளுக்கு 11 புதிய அறிவிப்புகள்: முதல்வா் மு.க. ஸ்டாலின் வெளியிட்டாா்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


