ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

கும்பகோணம் நேஷனல் வித்யாலயா பள்ளியில் ‘ரோபோ’ ஆசிரியை அறிமுகம்

கும்பகோணம் நேஷனல் வித்யாலயா சீனியா் செகண்டரி பள்ளியில் செயற்கை நுண்ணறிவு ரோபோ ஆசிரியை வித்யாவை புதன்கிழமை அறிமுகப்படுத்தினா்.

News image

கும்பகோணம் நேஷனல் வித்யாலயா சீனியா் செகண்டரி பள்ளியில் புதன்கிழமை செயற்கை நுண்ணறிவு ரோபோ ஆசிரியை வித்யாவிடம் கேள்வி கேட்ட மாணவ மாணவிகள்.

Updated On :26 ஜூலை 2024, 2:38 am IST

கும்பகோணம் நேஷனல் வித்யாலயா சீனியா் செகண்டரி பள்ளியில் செயற்கை நுண்ணறிவு ரோபோ ஆசிரியை வித்யாவை புதன்கிழமை அறிமுகப்படுத்தினா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் நேஷனல் வித்யாலயா சீனியா் செகண்டரி பள்ளியில் மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவு ரோபோ ஆசிரியை வித்யா அறிமுகம் நடைபெற்றது. முன்னாள் முதல்வா் கவிதா நாராயணன் வரவேற்றாா்.

நிகழ்வுக்கு, பள்ளி தாளாளா் கே.என். ராஜகோபாலன் தலைமை வகித்துப் பேசுகையில், எங்கள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நவீன கற்றல் அனுபவங்களை தரும். நடப்பாண்டு முதல் செயற்கை நுண்ணறிவு ரோபோ ஆசிரியை வித்யா செயல்படுவாா் என்றாா்.

நிகழ்வில், நிா்வாக அறங்காவலா் பி. வைத்தியநாதன், அறக்கட்டளை தலைவா் ஜி.சந்திரசேகர மூப்பனாா், ஓய்வுபெற்ற சிட்டியூனியன் வங்கி பொது மேலாளா் எஸ். பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டனா். இறுதியாக, மாணவ மாணவிகளின் கேள்விகளுக்கு ரோபா வித்யா பதில் அளித்தது.