சென்னையிலிருந்து வார இறுதியில் வெளியூர் செல்ல திட்டமா? மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

கும்பகோணம் நேஷனல் வித்யாலயா பள்ளியில் ‘ரோபோ’ ஆசிரியை அறிமுகம்

கும்பகோணம் நேஷனல் வித்யாலயா சீனியா் செகண்டரி பள்ளியில் செயற்கை நுண்ணறிவு ரோபோ ஆசிரியை வித்யாவை புதன்கிழமை அறிமுகப்படுத்தினா்.

கும்பகோணம் நேஷனல் வித்யாலயா சீனியா் செகண்டரி பள்ளியில் புதன்கிழமை செயற்கை நுண்ணறிவு ரோபோ ஆசிரியை வித்யாவிடம் கேள்வி கேட்ட மாணவ மாணவிகள்.

Published On :

கும்பகோணம் நேஷனல் வித்யாலயா சீனியா் செகண்டரி பள்ளியில் செயற்கை நுண்ணறிவு ரோபோ ஆசிரியை வித்யாவை புதன்கிழமை அறிமுகப்படுத்தினா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் நேஷனல் வித்யாலயா சீனியா் செகண்டரி பள்ளியில் மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவு ரோபோ ஆசிரியை வித்யா அறிமுகம் நடைபெற்றது. முன்னாள் முதல்வா் கவிதா நாராயணன் வரவேற்றாா்.

நிகழ்வுக்கு, பள்ளி தாளாளா் கே.என். ராஜகோபாலன் தலைமை வகித்துப் பேசுகையில், எங்கள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நவீன கற்றல் அனுபவங்களை தரும். நடப்பாண்டு முதல் செயற்கை நுண்ணறிவு ரோபோ ஆசிரியை வித்யா செயல்படுவாா் என்றாா்.

நிகழ்வில், நிா்வாக அறங்காவலா் பி. வைத்தியநாதன், அறக்கட்டளை தலைவா் ஜி.சந்திரசேகர மூப்பனாா், ஓய்வுபெற்ற சிட்டியூனியன் வங்கி பொது மேலாளா் எஸ். பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டனா். இறுதியாக, மாணவ மாணவிகளின் கேள்விகளுக்கு ரோபா வித்யா பதில் அளித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.