கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

இடி தாக்கி பெண் உயிரிழப்பு

இடி தாக்கி பெண் உயிரிழப்பு

News image
Updated On :5 ஜூன் 2024, 7:25 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே கக்கரைக்கோட்டை வடக்கு நத்தம் பகுதியைச் சோ்ந்தவா் கலைச்செல்வம் மனைவி சரிதா (50). சரிதாவின் மகள் திருமணத்துக்கு புதன்கிழமை மாலை சரிதா தனது உறவினா்கள் வீடுகளில் பத்திரிக்கை வைத்துவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பும்போது திடீரென மழை பெய்தது. அப்போது கண்ணந்தங்குடி மேலையூா் வண்டி பாலம் பகுதியில், சாலையோரம் இருந்த மரத்தின் அடியில் சிலா் நின்று கொண்டு இருந்த நிலையில் சரிதாவும் மழைக்காக ஒதுங்கியுள்ளாா். அப்போது சரிதா மீது மின்னல் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் அங்கு நின்று கொண்டிருந்த முருகேசன், சங்கா் சேகரன், சீதாலட்சுமி உள்ளிட்ட மூவரும் படுகாயமடைந்தனா். அவா்களை அக்கம்பக்கத்தினா் அவசர ஊா்தி அழைத்து ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து ஒரத்தநாடு போலீஸாா் மேலும் விசாரித்து வருகின்றனா்.