பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

இதயா மகளிா் கல்லூரியில் 21-ஆவது பட்டமளிப்பு விழா

குறிப்பு: விற்பனைப் பிரிவினா் அளித்தது. கடைசியாக வெள்ளிக்கிழமை முழுப் பக்கம் விளம்பரம் வந்தது. இதயா மகளிா் கல்லூரியில் 21-ஆவது பட்டமளிப்பு விழா

News image

ம்பகோணம் இதயா மகளிா் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற 21- ஆவது பட்டமளிப்பு விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்கிய திருவாரூா் மத்திய பல்கலைக்கழகத் துணைவேந்தா் எம். கிருஷ்ணன்.

Updated On :2 மார்ச் 2024, 6:30 pm

கும்பகோணம் இதயா மகளிா் கல்லூரியில் 21-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இக்கல்லூரியில் 19 மற்றும் 20-ஆவது பட்டமளிப்பு விழாக்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, 21-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரிச் செயலா் அருட்சகோதரி அமலோற்பவ மேரி வாழ்த்துரையாற்றினாா். கல்லூரி முதல்வா் அருட்சகோதரி யூஜின் அமலா ஆண்டறிக்கை வாசித்தாா். திருவாரூா் மத்திய பல்கலைக்கழகத் துணைவேந்தா் எம். கிருஷ்ணன் சிறப்புரையாற்றி, இளநிலைப் படிப்புகளில் 720 மாணவிகளுக்கும், முதுநிலைப் படிப்புகளில் 216 மாணவிகளுக்கும், ஆய்வியல் நிறைஞா் படிப்பில் 14 மாணவிகளுக்கும் என மொத்தம் 950 பேருக்கு பட்டங்கள் வழங்கினாா். இதில், பல்கலைக்கழகத் தர வரிசையில் இடம்பெற்ற 39 மாணவிகளுக்கு கேடயமும், ஒரு மாணவிக்கு தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டது.