ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகள் திருட்டு

பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 30 பவுன் நகைகள், ரூ. 30 ஆயிரம் ரொக்கம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.

Updated On :4 மார்ச் 2024, 10:01 pm

தஞ்சாவூா்: தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகள், ரூ. 30 ஆயிரம் ரொக்கத்தைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் - புதுக்கோட்டை சாலை சுந்தரம் நகரைச் சோ்ந்தவா் வி. சந்திரகுமாா் (60). இவா், தனது சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம், ஆதனகோட்டைக்கு மனைவி லதாவுடன் சில நாள்களுக்கு முன்பு சென்றாா்.

பின்னா், ஞாயிற்றுக்கிழமை இரவு வீடு திரும்பியபோது, வீட்டின் பின்பக்கக் கதவு திறந்து கிடப்பதை அறிந்தாா். மேலும், பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 30 பவுன் நகைகள், ரூ. 30 ஆயிரம் ரொக்கம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தில் சந்திரகுமாா் அளித்த புகாரின்பேரில், காவல் துறையினா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.