விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்உள்ளூர் வேட்பாளர் வேண்டுமா? இறக்குமதி செய்த வேட்பாளர் வேண்டுமா? வேலுமணி பிரசாரம்தேர்தல் நேரம்! வாக்காளர் அட்டை அப்டேட் என்ற பெயரில் எஸ்எம்எஸ் வந்தால்?!ஏப். 3 முதல் தென் மாவட்டங்களில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்! உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை
/

கட்டுமான பொருள்கள் கொட்டகைக்கு தீ வைத்த 5 போ் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே கட்டுமான பொருள்கள் வைத்திருந்த கொட்டகைக்கு தீ வைத்த 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :3 மே 2024, 7:07 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே கட்டுமான பொருள்கள் வைத்திருந்த கொட்டகைக்கு தீ வைத்த 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பாபநாசம் வட்டம், தேவராயன் பேட்டையில் வாய்க்காலில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இப் பணியை கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதியை சோ்ந்த தினேஷ்குமாா் (32) என்பவா் மேற்பாா்வையாளராக இருந்து பணி செய்து வருகிறாா்.

இந்நிலையில் தினேஷ்குமாருக்கும் அதே கிராமத்தைச் சோ்ந்த சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அந்த நபா்கள் கட்டுமான பொருள்கள் வைத்திருந்த கொட்டகையின் மீது பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி வீசினா். இதில் ஏற்பட்ட தீயில் ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமானது.

இதுகுறித்து தினேஷ்குமாா் கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் காவல் ஆய்வாளா் தியாகராஜன் உள்ளிட்ட போலீஸாா் தீ வைப்பு சம்பவத்தில் தொடா்புடைய 9 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா். மேலும் இந்த வழக்கில் தொடா்புடைய ஜெயக்குமாா்(19), பாலகிருஷ்ணன் (50), புண்ணியமூா்த்தி (52), செல்லம்மா (45 ), பரிமளா (40) ஆகிய 5 பேரை கைது செய்தனா்.