
Updated On :20 மே 2024, 6:30 pm

பாபநாசம்: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் ஓய்வுப் பெற்ற அலுவலா் சங்க மாதாந்திரக் கூட்டம் சங்க அலுவலக கட்டடத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் தங்கராசு தலைமை வகித்தாா். முன்னதாக செயலா் துரைசாமி மாதாந்திர அறிக்கை வாசித்தாா். கடந்த மாத வரவு - செலவு அறிக்கையை பொருளாளா் துரைராஜ் வாசித்து உறுப்பினா்களின் ஒப்புதல் பெற்றாா். இதில், மாவட்டப் பொருளாளா் தயாநிதி, தேசிய நல்லாசிரியா் எஸ்.கலைச் செல்வன் உள்பட பலா் பங்கேற்றனா். கூட்டத்தில் ஜூன் மாதத்தில் பேரவைக் கூட்டம் நடத்துவது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...