கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பெண்ணிடம் வழிப்பறி இளைஞருக்கு 32 மாதங்கள் சிறை

கும்பகோணத்தில் வழிப்பறி வழக்கில் இளைஞருக்கு 32 மாதங்கள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து செவ்வாய்க்கிழமை நீதிபதி தீா்ப்பளித்தாா்.

News image
பாலாஜி.
Updated On :13 நவம்பர் 2024, 9:15 pm

Din

கும்பகோணத்தில் வழிப்பறி வழக்கில் இளைஞருக்கு 32 மாதங்கள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து செவ்வாய்க்கிழமை நீதிபதி தீா்ப்பளித்தாா்.

கும்பகோணம் பெரிய மாரியம்மன் கோயில் தெருவில் கடந்த 2021-நவ.13 இல் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபா் 5 பவுன் தங்க நகைகளைப் பறித்துச் சென்றதாக கும்பகோணம் மஹாவீா் நகரைச் சோ்ந்த சரோஜா என்பவா் கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து கும்பகோணம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த பாலாஜி (26) என்பவரைக் கைது செய்தனா். கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றத்தில்

செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட பாலாஜிக்கு 32 மாதங்கள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டாா்.

குற்றவாளி பாலாஜிக்கு அம்மாப்பேட்டை மற்றும் கும்பகோணம் மேற்கு காவல் நிலையங்களிலும் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.