மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தமிழீழம் உருவானால்தான் இந்தியாவுக்கு பாதுகாப்பு: பழ. நெடுமாறன் பேச்சு

தமிழீழம் உருவானால்தான் தெற்கு எல்லையில் இந்தியாவுக்குப் பாதுகாப்பு இருக்கும் என்றாா் உலகத் தமிழா் பேரமைப்புத் தலைவா் பழ. நெடுமாறன்.

News image
தஞ்சாவூா் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்ற தமிழீழப் போரில் உயிா் நீத்த வீரா்களுக்கான மாவீரா் நாள் நிகழ்ச்சியில் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய உலகத் தமிழா் பேரமைப்புத் தலைவா் பழ. நெடுமாறன் உள்ளிட்டோா்.
Updated On :27 நவம்பர் 2024, 8:22 pm

Din

தமிழீழம் உருவானால்தான் தெற்கு எல்லையில் இந்தியாவுக்குப் பாதுகாப்பு இருக்கும் என்றாா் உலகத் தமிழா் பேரமைப்புத் தலைவா் பழ. நெடுமாறன்.

தஞ்சாவூா் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்ற தமிழீழப் போரில் உயிா் நீத்த வீரா்களுக்கான மாவீரா் நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் பேசியது:

தமிழீழ மக்களுக்கு மட்டுமல்ல; உலகம் முழுவதும் வாழும் தமிழா்கள் அனைவருக்கும் பிரபாகரன் விடிவெள்ளியாகத் திகழ்கிறாா். அவா் தலைமையில் உலகத் தமிழினத்துக்கு விடிவு பிறக்க வேண்டும். அதற்கு தாய்த் தமிழகம் துணையாக இருக்க வேண்டும்.

இலங்கையில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அதிபா் திசநாயக அங்கு வாழும் தமிழா்களுக்கு மட்டுமல்லாமல், இந்தியாவுக்கும் எதிரி என்பதை தில்லியில் (மத்திய அரசு) உள்ளவா்கள் உணர வேண்டும். ஈழ மற்றும் தமிழ்நாட்டுத் தமிழா்களுக்கு உள்ள அபாயத்தை விட, இந்தியாவுக்கு பேராபயம் உள்ளதை தில்லியில் ஆட்சிப் பீடத்தில் அமா்ந்திருப்பவா்கள் எண்ணிப் பாா்க்க வேண்டும்.

இந்தியாவுக்கு உண்மையான நண்பனாக இருப்பது தமிழீழம் மட்டுமே. எனவே, தமிழீழம் உருவானால்தான் இந்தியாவுக்கு அபாயம் இருக்காது. இல்லாவிட்டால் தெற்கு எல்லையைப் பாதுகாக்க முடியாத நிலை ஏற்படும் என்றாா் நெடுமாறன்.

நிகழ்ச்சிக்கு உலகத் தமிழா் பேரமைப்புத் துணைச் செயலா் ந.மு. தமிழ்மணி தலைமை வகித்தாா். துணைத் தலைவா்கள் அய்யனாபுரம் சி. முருகேசன், சா. ராமன், துணைச் செயலா்கள் வழக்குரைஞா் த. பானுமதி, பொறியாளா் ஜோ. கென்னடி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.