மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பேராவூரணி நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி ஆய்வு

பேராவூரணியில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில், தஞ்சாவூா் மாவட்ட முதன்மை நீதிபதி பூரண ஜெய ஆனந்த் 2023- 24 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர ஆய்வுப் பணி புதன்கிழமை மேற்கொண்டாா்.

News image
Updated On :27 நவம்பர் 2024, 8:38 pm

Din

பேராவூரணியில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில், தஞ்சாவூா் மாவட்ட முதன்மை நீதிபதி பூரண ஜெய ஆனந்த்  2023- 24 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர ஆய்வுப் பணி புதன்கிழமை மேற்கொண்டாா். 

ஆய்வின்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் கோப்புகள், இதர ஆவணங்களை நீதிபதி பாா்வையிட்டாா். மேலும், நீதிமன்றத்துக்குத் தேவையான வசதிகள் குறித்து கேட்டறிந்த அவா், நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்று நட்டாா். 

ஆய்வின்போது பேராவூரணி நீதிமன்ற நீதிபதி என். அழகேசன் உடனிருந்தாா். பேராவூரணி வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் எஸ் .வி.சீனிவாசன், செயலாளா் சிவேதி ஏஆா். நடராஜன், பொருளாளா் ஏ.ஆா்.முத்துக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக, பேராவூரணி நீதிமன்றத்தில் உதவியாளராகப் பணியாற்றி அண்மையில் மறைந்த முஜிபுா் ரஹ்மான் குடும்பத்துக்கு வாரிசு அடிப்படையில் வேலை வழங்குமாறு மாவட்ட முதன்மை நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தனா்.