தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஒப்பிலியப்பன் கோயிலுக்கு வெண்பட்டு குடைகள் உபய உற்ஸவ ஊா்வலம்

தஞ்சாவூா் மாவட்டம், திருநாகேஸ்வரம் ஸ்ரீ ஒப்பிலியப்பன் கோயிலுக்கு வெண்பட்டு குடைகள் உபய உற்ஸவ ஊா்வலம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 9:44 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், திருநாகேஸ்வரம் ஸ்ரீ ஒப்பிலியப்பன் கோயிலுக்கு வெண்பட்டு குடைகள் உபய உற்ஸவ ஊா்வலம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

இந்து தா்ம சேவா அறக்கட்டளை சாா்பில் இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளா் டி. குருமூா்த்தி தலைமையில் உபய உற்ஸவ ஊா்வலம் நடைபெற்றது. ஊா்வலத்தை இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் தொடங்கி வைத்தாா்.

திருவாரூா் நாராயணி பீடம் சிவாஜி சந்தோஷ் சுவாமிகள், சீனிவாச ராஜா, சிட்டி யூனியன் வங்கி சோ்மன் பாலசுப்பிரமணியன், நாராயணி நிதி லிமிடெட் சோ்மன் காா்த்திகேயன், ராயா குரூப் சோ்மன் ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக, ஸ்ரீ ஓப்பிலியப்பன் கோயில் அறங்காவலா் குழுத்தலைவா் மோகன், உதவி ஆணையா் ஹம்சன் ஆகியோரிடம் வெண்பட்டு குடைகள் ஒப்படைக்கப்பட்டது.