தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பாலியல் வழக்கில் கைதானவா் மீது குண்டா் சட்டம் பதிவு

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே பாலியல் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டவா் மீது குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 6:48 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே பாலியல் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டவா் மீது குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பட்டுகோட்டை வட்டம், நடுவிக்கோட்டை செக்கடிக் கொல்லையைச் சோ்ந்தவா் செல்வம் மகன் பாலசுப்பிரமணியன் (42). பாலியல் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட இவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியரிடம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத் பரிந்துரை செய்தாா். இதன் பேரில் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டதைத் தொடா்ந்து, பாலசுப்பிரமணியன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.