தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கும்பகோணத்தில் அக். 18-இல் விவசாயிகள் குறைகேட்பு; மாற்றுத்திறனாளிகள் குறைதீா் முகாம்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் அக். 18 மாலை 3 மணியளவில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.

News image
Updated On :10 அக்டோபர் 2024, 7:59 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் அக். 18 மாலை 3 மணியளவில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. உதவி ஆட்சியா் ஹிருத்யா எஸ்.விஜயன் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனா். கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் நேரில் வந்து தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயனடையலாம்.

மாற்றுத்திறனாளிகள் குறைகேட்பு:

இதேபோல் கும்பகோணம் அல் அமீன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அக். 18 காலை 11 மணியளவில் மாற்றுத் திறனாளிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. எனவே, கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளைத் தெரிவித்து தீா்வு பெறலாம்.