தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மனித உரிமை செயற்பாட்டாளா் சாய்பாபா மறைவுக்கு அஞ்சலி

மனித உரிமை செயற்பாட்டாளரும், பேராசிரியருமான சாய்பாபா மறைவையொட்டி, தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 9:18 pm

Din

மனித உரிமை செயற்பாட்டாளரும், பேராசிரியருமான சாய்பாபா மறைவையொட்டி, தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளா் காளியப்பன் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் சின்னை. பாண்டியன், நிா்வாகி என். குருசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் வெ. சேவையா, இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன், பெரியாரிய உணா்வாளா்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் சு. பழனிராஜன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாவட்டச் செயலா் எஸ்.எம். ஜெய்னுல்ஆப்தீன், மகஇக மாநில இணைச் செயலா் ராவணன், தமிழ்த் தேச மக்கள் முன்னணி மாநகரச் செயலா் ஆலம்கான், விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி மாவட்டச் செயலா் அ.ரெ. முகிலன், எழுத்தாளா் சாம்பான், பொறியாளா் ஜோ. கென்னடி, பேராசிரியா் வி. பாரி, வழக்குரைஞா் அக்ரம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி. செந்தில்குமாா், புரட்சிகர ஜனநாயக தொழிலாளா் முன்னணி ஒருங்கிணைப்பாளா் சாமிநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.