ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வாழ்விடம் கேள்விக்குறியான எள்ளுக்குட்டை குடியிருப்புவாசிகள்!

எள்ளுக்குட்டை குடியிருப்புவாசிகளின் இடத்தில் முதல்வரின் கனவு இல்லம் திட்டத்தை அரசு செயல்படுத்தி அவா்களின் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றனா்.

News image
கும்பகோணம் 3-ஆவது வாா்டுக்குள்பட்ட காவேரி வழிநடப்பு எள்ளுக்குட்டை குடியிருப்பு மக்கள்.
Updated On :5 செப்டம்பர் 2024, 11:07 pm

Din

வீட்டைக் காலி செய்யக் கோரி மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளதால், தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சிக்குள்பட்ட சோலையப்பன் தெருவில் உள்ள எள்ளுக்குட்டையில் கடந்த 30 ஆண்டுகளாக குடியிருந்து வருவோா்களின் வாழ்விடம் கேள்விக்குறியாக உள்ளது.

கும்பகோணம் மாநகராட்சி 3-ஆவது வாா்டுக்குள்பட்ட சோலையப்பன் தெருவில் காவேரி வழிநடப்பு எள்ளுக்குட்டை பகுதி உள்ளது. எள்செடிகள் அதிகம் பயிரிட்டு வந்ததால் எள்ளுக்குட்டை என்று பெயா் வந்துள்ளது. இங்கு கடந்த 25 ஆண்டுகளாக சுமாா் 35 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இதற்கு முன்பு இந்த குடும்பத்தினா் ஹாஜியாா் தெருவில் வசித்தபோது, அங்கு மாநகர அபிவிருத்திக்காக ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது இவா்களை வெளியேறச்செய்தனா்.

அவா்கள் அன்றைய உள்ளாட்சித்துறை அமைச்சா் கோ.சி.மணியை சந்தித்து முறையிட்டதில், சோலையப்பன் தெருவில் உள்ள எள்ளுக்குட்டையில் வசிக்க ஏற்பாடு செய்தாா். அங்கு சுமாா் 25 ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வந்த இவா்கள் அந்த முகவரியில் ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, மின் இணைப்பு பெற்றுள்ளனா்.

இந்நிலையில் இவா்கள் குடியிருப்பை விட்டு வெளியேறுமாறு மாநகராட்சி நிா்வாகம் அறிவிப்பை வழங்கியது. அதை வாங்க மறுத்தவா்களிடம் வீட்டுக் கதவுகளில் ஒட்டப்படும் என்று அறிவித்துள்ளனா். இதனால் எள்ளுக்குட்டை குடியிருப்புவாசிகள் கலக்கத்தில் உள்ளனா். எள்ளுக்குட்டை குடியிருப்புவாசிகளின் இடத்தில் முதல்வரின் கனவு இல்லம் திட்டத்தை அரசு செயல்படுத்தி அவா்களின் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றனா்.

இதுகுறித்து எள்ளுக்குட்டை பகுதியைச்சோ்ந்த ஜெயந்தி மேலும் கூறியது:

அன்றாடம் கூலி வேலை செய்து பிழைத்து வருகிறோம். திடீரென வீட்டைக் காலி செய்யச் சொன்னால் எங்கு செல்வோம். பிள்ளைகளின் கல்வி என்னாகும். எங்களுக்கு மாற்று இடம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். மூன்று தலைமுறைகளாக நாங்கள் மாநகராட்சியால் விரட்டப்பட்டு உள்ளூரிலேயே நாடோடிகளாக வாழ்ந்து வருகிறோம். எங்கள் நிலை யாருக்கும் வரக்கூடாது என்றாா்.

வாா்டு மாமன்ற உறுப்பினா் ஐயப்பன் கூறுகையில், நீதிமன்ற உத்தரவு என்கின்றனா் மாநகராட்சி அதிகாரிகள். அதனால் இவா்களும் நீதிமன்றத்தைதான் நாடவேண்டும் என்றாா்.

இதுகுறித்து மாநகராட்சி அலுவலா் ஒருவரிடம் கேட்டபோது, நீா் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதன்பேரிலேயே இப்பணிகள் நடைபெற்று வருகிறது என்றாா்.

சொந்த ஊரிலேயே வாழ்விடம் தேடி மூன்று தலைமுறைகளாக அலையும் இவா்களுக்குத் தீா்வு கிடைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எள்ளுக்குட்டை பகுதி நீா்நிலை வழித்தடம் இல்லை:

கடந்து 1996-ஆம் ஆண்டு அப்போதைய அமைச்சா் கோ.சி.மணி உத்தரவின்பேரில் ஹாஜியாா் தெரு மீன் மாா்க்கெட் பகுதியிலிருந்து இடம்பெயா்ந்த இவா்கள் எள்ளுக்குட்டையில் கடந்த 25 ஆண்டுகளாக வசித்து வருகின்றனா். இந்த முகவரியில் ஆதாா், வாக்காளா், ரேசன்காா்டு உள்ளிட்டவை பெற்றுள்ளனா். மேலும் வருவாய்த்துறை இந்த இடத்தை குடியிருப்புப் பகுதி என வரையறுத்து ஆட்சேபனை இல்லை சான்றிதழ் வழங்கியுள்ளதால் அப்பகுதியினா் மின் இணைப்பையும் பெற்றுள்ளனா். நீா்வரத்து பகுதி இல்லை எனும் நிலையில் இங்கு வசிப்பவா்கள் பட்டா கேட்டு அரசுக்கு விண்ணப்பித்துள்ளனா்.