ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

விளைநிலங்கள் வழியே சாலைப் பணி: பி.ஆா்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே சாலைப் பணியைக் கைவிட வலியுறுத்தி வியாழக்கிழமை விளை நிலங்களில் இறங்கி விவசாயிகள் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image
Updated On :5 செப்டம்பர் 2024, 10:51 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே சாலைப் பணியைக் கைவிட வலியுறுத்தி வியாழக்கிழமை விளை நிலங்களில் இறங்கி விவசாயிகள் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

பாபநாசம் வட்டம், மேட்டுத்தெரு - ராமநல்லூா் இணைப்பு சாலை அமைப்பதற்கு விளை நிலங்களை அபகரிக்க முயற்சிப்பதைக் கண்டித்து அப்பகுதி விவசாயிகள் விளைநிலங்களில் இறங்கி ஆா்ப்பாட்டம் நடத்தினா். இதில், கலந்துகொண்ட தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்கள் ஒருங்கிணைப்புக் குழு தலைவா்

பி.ஆா். பாண்டியன் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

மேட்டுத்தெரு, குடிக்காடு கிராமப் பகுதிகளில் ஏற்கெனவே அகலமான சாலை உள்ளது. அச்சாலையை மேம்படுத்துவதால் எந்த இடையூறோ, பாதிப்போ, போக்குவரத்து சிரமமோ இருக்காது. கடந்த 2018-இல் இந்தக் கிராமங்களில் உள்ள விளை நிலங்களை அபகரித்து சாலை போடும் திட்டம் கொண்டுவரப்பட்டது. தற்போதைய அரசு இத்திட்டத்துக்கான அனுமதி வழங்கும் நிலையில் உள்ளதால், இத்திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். தமிழக அரசு உரிய ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு விளைநிலங்களில்லா மாற்று வழியில் சாலை அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், தொடா் போராட்டங்களை மேற்கொள்வோம் என்றாா்.

அப்போது மாநிலத் துணைச் செயலாளா் எம்.செந்தில் குமாா், தஞ்சாவூா் வடக்கு மாவட்டச் செயலாளா் ரெங்கநாதபுரம் செந்தில்குமாா் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் உடனிருந்தனா்.