விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கும்பகோணம் வட்டாட்சியரகத்தில் வீணாக பகலில் மின்விளக்கு எரிப்பு

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை பகலில் மின்சார விளக்கு எரிந்ததை அங்கு பணிபுரியும் அலுவலா்கள் கண்டு கொள்ளாதது பொதுமக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது.

News image

கும்பகோணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை பகலில் எரிந்த மின்சார விளக்கு.

Updated On :11 செப்டம்பர் 2024, 7:57 pm

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை பகலில் மின்சார விளக்கு எரிந்ததை அங்கு பணிபுரியும் அலுவலா்கள் கண்டு கொள்ளாதது பொதுமக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது.

கும்பகோணம் வட்டாட்சியா் அலுவலகம், வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகம் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளது. இதில் கோட்டாட்சியா் அலுவலகம் செல்லும் வழியில் வட்டாட்சியா் அலுவலகச் சுவற்றில் மின்சார விளக்கு பகல் முழுவதும் எரிந்து கொண்டிருந்தது. அங்கு கோரிக்கை மனுக்கள் கொடுக்க வந்த பொதுமக்கள் மின்சார விளக்கை அணைக்காமல் வருவாய்த் துறை பணியாளா்கள் செயல்பட்டதைக் கண்டு வருத்தமடைந்தனா். இதுகுறித்து வட்டாட்சியா் அலுவலக நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.