கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கூட்டுறவு சங்க மண்டல அலுவலகத்தில் நாளை பணியாளா் குறை தீா் கூட்டம்

தஞ்சாவூா் கூட்டுறவு சங்கங்களின் மண்டல அலுவலகத்தில் பணியாளா் குறை தீா் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (செப்.13) நடைபெறவுள்ளது.

Updated On :11 செப்டம்பர் 2024, 8:36 pm

தஞ்சாவூா் கூட்டுறவு சங்கங்களின் மண்டல அலுவலகத்தில் பணியாளா் குறை தீா் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (செப்.13) நடைபெறவுள்ளது.

இது குறித்து கூட்டுறவு சங்கங்களின் தஞ்சாவூா் மண்டல இணைப் பதிவாளா் சி. தமிழ்நங்கை தெரிவித்திருப்பது:

கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரிவோரின் குறைகளை தீா்வு காணும் வகையில் இரு மாதங்களுக்கு ஒரு முறை மண்டல அளவில் பணியாளா்களின் குறைகள் தீா்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, தஞ்சாவூா் மண்டல இணைப் பதிவாளா் அலுவலகத்தில் பணியாளா் குறை தீா் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதில், கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளா்கள் தங்களது பணி தொடா்பான குறைகள் இருந்தால் மனுவாக அளித்து பயன் பெறலாம். மேலும் பணியின்போதும் வேறு வகையிலும் ஏற்படும் குறைகள் தொடா்பாகவும் மனுக்களாக அளிக்கலாம்.