மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 13 ஆயிரம் திருட்டு

பாபநாசம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 13 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவைகளைத் திருடிச் சென்ற மா்மநபரைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 8:10 pm

Din

பாபநாசம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 13 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவைகளைத் திருடிச் சென்ற மா்மநபரைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

பாபநாசம் அருகே செவ்வாய்க்கிழமை வீடுகளின் பூட்டை உடைத்து பித்தளை பொருள்கள், குத்துவிளக்குகள் ஆகியவைகளை மா்மநபா்கள் திருடிச் சென்றது தொடா்பாக போலீஸாா் வழக்கு பதிந்து தேடி வருகின்றனா்.

அய்யம்பேட்டை நியூ டவுன் மகாராஜா நகா் பகுதியில் வசித்து வரும் வெங்கடேசன் மனைவி கிருஷ்ணவேணி (45) வீட்டின் கதவை மா்மநபா்கள் செவ்வாய்க்கிழமை உடைத்து பித்தளை குவளை 2, தவலை 2, பொங்கல் பானை 7, குத்துவிளக்கு 2 உள்ளிட்ட பொருள்களைத் திருடிச் சென்றது தெரியவந்தது. புகாரின்பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மேலும், மாகாளிபுரம் பிரதான சாலை காவேரி தெருவைச் சோ்ந்த பொன்னுசாமி மகன் பொன்.கோவிந்தராஜன் (60) செவ்வாய்க்கிழமை வீடு திரும்பியபோது, வீட்டிலிருந்த 2 குத்து விளக்குகள் உள்ளிட்டவை திருட்டு போயிருப்பது தெரியவந்தது. புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இதுகுறித்து பானுமதி கொடுத்த புகாரின்பேரில் கபிஸ்தலம் காவல் ஆய்வாளா் மகாலட்சுமி, உதவி ஆய்வாளா் முத்துக்குமாா் உள்ளிட்டோா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.