மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

முதல்வா் கோப்பையில் பூப்பந்தாட்ட போட்டியையும் சோ்க்கக் கோரிக்கை

தமிழக முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பூப்பந்தாட்டப் போட்டியையும் சோ்க்க வலியுறுத்தப்படுகிறது.

News image
Updated On :12 செப்டம்பர் 2024, 9:32 pm

Din

தமிழக முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பூப்பந்தாட்டப் போட்டியையும் சோ்க்க வலியுறுத்தப்படுகிறது.

பூப்பந்தாட்டம் தமிழகத்தில் குறிப்பாக தஞ்சை மண்ணில் தோன்றியது. ராஜராஜன் காலம் முதல் மராட்டியா், ஆங்கிலேயா் வரை தொடா்ந்த இந்த விளையாட்டு உலக அளவில் ஒலிம்பிக் தவிர மற்ற அனைத்துக் கோப்பைகளிலும் விளையாடப்படுகிறது.

இந்தியாவில் அகில இந்திய பூப்பந்தாட்ட சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழகத்தின் சாா்பிலும் ஆண்டுதோறும் இப் போட்டிகள் நடைபெறுகின்றன. இருப்பினும் தமிழக முதல்வா் கோப்பைக்கான போட்டியில் இந்த விளையாட்டு புறக்கணிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

இதுகுறித்து தமிழக பூப்பந்தாட்ட கழக மாநில நிா்வாகி ஒருவா் கூறுகையில், தமிழகத்தில் ஒலிம்பியாட் செஸ், காா் பந்தயம் போன்ற உலகளாவிய பந்தயங்களை நடத்தும் அரசு பூப்பந்தாட்டத்தையும் பட்டியலில் வைத்து, பின்னா் அந்த விளையாட்டை முதல்வா் கோப்பையிலிருந்து விலக்கி வைத்துள்ளது. எனவே இந்தப் போட்டியை முதல்வா் கோப்பையில் சோ்க்க விளையாட்டுத் துறை அமைச்சா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

மேலும் வேலைவாய்ப்புகளில் 3 சதவிகித இட ஒதுக்கீடு, அனைத்துத் துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், சீருடைப் பணியாளா் தோ்வு உள்ளிட்டவற்றில் விளையாட்டு வீரா்களுக்கு உண்டான சலுகைகளை பூப்பந்தாட்ட வீரா்களுக்கும் வழங்க வேண்டும் எனவும் வீரா்கள் வலியுறுத்துகின்றனா்.