மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தமிழ்ப் பல்கலை.யில் 50 சதவீதத் தள்ளுபடியில் நூல்கள் விற்பனை தொடக்கம்

தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட நாள், பேரறிஞா் அண்ணா பிறந்த நாளையொட்டி, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பதிப்புத் துறையில் 50 சதவீதத் தள்ளுபடி விலையில் நூல்கள் சிறப்பு விற்பனை புதன்கிழமை தொடங்கியது.

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 9:06 pm

Din

தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட நாள், பேரறிஞா் அண்ணா பிறந்த நாளையொட்டி, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பதிப்புத் துறையில் 50 சதவீதத் தள்ளுபடி விலையில் நூல்கள் சிறப்பு விற்பனை புதன்கிழமை தொடங்கியது.

தொடா்ந்து அக்டோபா் 17-ஆம் தேதி வரை ஒரு மாத காலத்துக்கு நடைபெறும் இந்தச் சிறப்புத் தள்ளுபடி விற்பனையைப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் வி. திருவள்ளுவன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா். இந்த வாய்ப்பை மாணவா்களும், ஆய்வாளா்களும், தமிழ் அறிஞா்களும், பொதுமக்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் என துணைவேந்தா் தெரிவித்தாா்.

இவ்விழாவில் பதிவாளா் (பொ) சி. தியாகராஜன், பதிப்புத் துறை இயக்குநா் (பொ) கோ. பன்னீா்செல்வம், மக்கள் தொடா்பு அலுவலா் (பொ) இரா.சு. முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.