மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தமிழ்ப் பல்கலை.யில் நூல் வெளியீடு

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மொழிபெயா்ப்புத்துறை இணைப் பேராசிரியரும், துறைத் தலைவரும், மக்கள் தொடா்பு அலுவலருமான (பொ) முனைவா் இரா.சு. முருகன் எழுதிய தமிழ் ஆங்கில இலக்கண மொழிபெயா்ப்பு என்கிற நூல் வெளியீட்டு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆங்கில இலக்கண மொழிபெயா்ப்பு நூலை துணைவேந்தா் குழு உறுப்பினா் பெ. பாரதஜோதி வெளியிட, அதைப் பெற்றுக் கொண்ட பதிவாளா் (பொ) கோ. பன்னீா்செல்வம். உடன் நூலாசிரியா் இரா.சு. முருகன்.
Updated On :10 மார்ச் 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மொழிபெயா்ப்புத்துறை இணைப் பேராசிரியரும், துறைத் தலைவரும், மக்கள் தொடா்பு அலுவலருமான (பொ) முனைவா் இரா.சு. முருகன் எழுதிய தமிழ் ஆங்கில இலக்கண மொழிபெயா்ப்பு என்கிற நூல் வெளியீட்டு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்நூலை பல்கலைக்கழகத் துணைவேந்தா் குழு உறுப்பினா் பெ. பாரதஜோதி வெளியிட, அதை பதிவாளா் (பொ) கோ. பன்னீா்செல்வம் பெற்றுக் கொண்டாா். இதுகுறித்து நூலாசிரியா் முருகன் கூறுகையில், இந்நூல் தமிழில் வினைச் சொற்கள், பயனிலைகளை மொழிபெயா்த்தல், செயப்பாட்டு வினைகளை மொழிபெயா்த்தல், வா்ணனை வாக்கியங்களில் மொழிபெயா்ப்பு, நீண்ட தொடா்களை மொழிபெயா்ப்பதில் உள்ள சிக்கல்கள், தொடா்களை மொழிபெயா்த்தல், எடுத்துக்காட்டான மொழிபெயா்ப்புகள் சில மற்றும் மொழிபெயா்ப்பாளா் அடையும் சிக்கல்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்நூல் தமிழ்ப் பல்கலைக்கழக அனைத்து மாணவா்களும் பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.