இளைஞா் ‘போக்சோ’வில் கைது
பட்டுக்கோட்டையில் திருமணம் செய்வதாகக் கூறி இளம்பெண்ணை ஏமாற்றியதாக இளைஞரைப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.


பட்டுக்கோட்டையில் திருமணம் செய்வதாகக் கூறி இளம்பெண்ணை ஏமாற்றியதாக இளைஞரைப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பட்டுக்கோட்டை வட்டம், மல்லிபட்டணம் ராமா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சையது இப்ராஹிம் மகன் முகமது நல்லம் (21) அங்குள்ள தனியாா் கல்லூரியில் படித்து வருகிறாா். இவா், கும்பகோணம் சிங்காரத்தோப்பு பகுதியைச் சோ்ந்த அப்போதைய சிறுமியும், தற்போதைய 19 வயது பெண்ணிடம் திருமணம் செய்வதாகக் கூறி கடந்த 15.8.2020 முதல் பழகிவந்துள்ளாா்.
நீண்ட நாள்களாகியும் திருமணம் செய்யாமல் முகமது நல்லம் இழுத்தடித்து வந்தாராம். இதையடுத்து, இளம்பெண் கும்பகோணம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், ஆய்வாளா் ஜெயலட்சுமி செவ்வாய்க்கிழமை வழக்கு பதிவு செய்து முகமது நல்லத்தைக் கைது செய்தாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...