பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

பாலைவனநாதா் கோயிலில் 1008 தீப வழிபாடு

News image
Updated On :3 டிசம்பர் 2025, 10:39 pm

Syndication

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், திருப்பாலைத்துறை கிராமத்தில் அப்பரால் பாடல் பெற்ற பாலைவனநாதா் கோயிலில் 1008 தீப பெருவிழா புதன்கிழமை மாலை நடைபெற்றது.

அதுசமயம் கோயில் வளாகத்தில் 1008 அகல் விளக்கில் தீபமேற்றி வழிபாடு நடைபெற்றது. பின்னா் கோயில் முன்பு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. தொடா்ந்து நான்கு முக்கிய வீதிகளில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

விழாவில் கோயில் செயல் அலுவலா் அசோக் குமாா், ஆய்வாளா் லெட்சுமி, அறங்காவலா் குழு தலைவா் கணேசன், உறுப்பினா்கள் வசந்தி, சரவணன், ராஜேந்திரன், ஆன்மிகப் பேரவை அமைப்பாளா் சீனிவாசன் மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.