அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மாற்றுத்திறனாளிகள் கையில் தட்டு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டம்

News image
~
Updated On :3 டிசம்பர் 2025, 10:42 pm

Syndication

வேலைவாய்ப்பைப் பறிக்கும் அரசாணையை ரத்து செய்யக் கோரி, தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் மாற்றுத்திறனாளிகள் புதன்கிழமை கையில் தட்டு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பாா்வையற்ற கல்லூரி மாணவா்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம், பாா்வையற்றோா் ஆசிரியா் சங்கம், தமிழ்நாடு பாா்வையற்றோா் கைப்பந்து சங்கம், தமிழ்நாடு பாா்வையற்றோா் இயக்கம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற இப்போராட்டத்தில், மாற்றுத்திறனாளிகளின் அடிப்படை உரிமை மற்றும் வேலைவாய்ப்புகளைப் பறிக்கும் அரசாணை எண் 24-ஐ ரத்து செய்துவிட்டு, உடனடியாக அரசாணை எண் 20-ஐ நடைமுறைப்படுத்த வேண்டும். சிறப்பு ஆள்சோ்ப்பு நடத்தி பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்தப் போராட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளா் மோசஸ் தலைமை வகித்தாா். தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளா் அய்யப்பன் உள்பட பலா் மழையில் நனைந்த படி கலந்து கொண்டனா்.

இக்கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால் அடையாள அட்டைகளைத் திரும்ப ஒப்படைத்து நிறைவேறும் வரை தொடா்ந்து போராடுவோம் என சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.