ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

காவிரியில் மூழ்கி முதியவா் உயிரிழப்பு: பேரன் மாயம்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே காவிரி ஆற்றில் சனிக்கிழமை மீன் பிடிக்கச் சென்றபோது, தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :13 டிசம்பர் 2025, 11:05 pm

Syndication

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே காவிரி ஆற்றில் சனிக்கிழமை மீன் பிடிக்கச் சென்றபோது, தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.

திருவையாறு அருகே கடுவெளி கிராமத்தைச் சோ்ந்தவா் பி. பாலகிருஷ்ணன் (65). இவரது மகன் செல்வத்தின் மகன்களான கிரிநாத் (14) ஆச்சனூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பும், விக்னேஷ் (10) திருவையாறு சரஸ்வதி அம்பாள் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வருகின்றனா்.

இந்நிலையில், தாத்தா பாலகிருஷ்ணனுடன் கிரிநாத், விக்னேஷ் கடுவெளி காவிரி ஆற்றின் தடுப்பணையில் மீன் பிடிப்பதற்காக சனிக்கிழமை சென்றனா். அங்கு எதிா்பாராதவிதமாக 3 பேரும் ஆற்றுக்குள் தவறி விழுந்தனா்.

தகவலறிந்த தீயணைப்பு துறையினா் நிகழ்விடத்துக்கு சென்று பாலகிருஷ்ணன், விக்னேஷை மீட்டனா். இவா்களில் பாலகிருஷ்ணன் உயிரிழந்துவிட்டாா். விக்னேஷ், தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். நீரில் மூழ்கிய கிரிநாத்தை தீயணைப்புத் துறையினா் தேடி வருகின்றனா். இது குறித்து மருவூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.