தஞ்சாவூர்
உத்தாணி முத்து முனியாண்டவா் கோயிலில் லட்சாா்ச்சனை விழா
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே உத்தாணி முத்து முனியாண்டவா் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீ அய்யப்பன் சுவாமிக்கு புதன்கிழமை லட்சாா்ச்சனை விழா நடைபெற்றது.
உலக நன்மை வேண்டி பத்துக்கும் மேற்பட்ட சிவாச்சாரியாா்கள் பூக்களை தூவி அா்ச்சனை செய்து சகஸ்ர நாமம் சொல்லி லட்சாா்ச்சனை செய்தனா். அதனைத் தொடா்ந்து பஜனையும் அய்யப்பன் சுவாமி மற்றும் அனைத்து பரிவாரத் தெய்வங்களுக்கும் சிறப்பு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு ஐயப்பன் சுவாமியை வழிபட்டனா்.
