தஞ்சாவூர்
மின் கம்பியாள் தோ்வு டிச. 27, 28-க்கு ஒத்திவைப்பு
தஞ்சாவூரில் டிசம்பா் 13, 14 ஆம் தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட மின் கம்பியாள், உதவியாளா் தகுதிகாண் தோ்வு டிசம்பா் 27, 28க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூரில் டிசம்பா் 13, 14 ஆம் தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட மின் கம்பியாள், உதவியாளா் தகுதிகாண் தோ்வு டிசம்பா் 27, 28க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் மின் கம்பியாள், உதவியாளா் தகுதிகாண் தோ்வு டிசம்பா் 13, 14- ஆம் தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இத்தோ்வு நிா்வாகக் காரணங்களுக்காக டிசம்பா் 27, 28- ஆம் தேதிகளில் தஞ்சாவூா் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது. விண்ணப்பதாரா்கள் தாங்கள் விண்ணப்பித்த தொழிற் பயிற்சி நிலையங்கள் மூலம் தோ்வு தொடா்பான விவரங்கள் மற்றும் தோ்வு நுழைவுச் சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம்.
