ஆசிரியா்கள் மீதான போக்ஸோ வழக்குகளில் 90 சதவீதம் பொய்யானவை: கே.ஆா். நந்தகுமாா்
பள்ளி ஆசிரியா்கள் மீது பதியப்படும் ‘போக்ஸோ’ வழக்குகளில் 90 சதவீதம் பொய்யானவை; அவை குறித்து முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்றாா் தமிழ்நாடு நா்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க மாநில பொதுச் செயலா் கே.ஆா். நந்தகுமாா்.










