புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

சித்தாலத்தூருக்கு பேருந்துசேவை நீட்டிப்பு: அமைச்சா் கோவி.செழியன் தொடங்கிவைத்தாா்

திருவிடைமருதூா் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள சித்தாலத்தூா் கிராமத்துக்கு நீட்டிக்கப்பட்ட பேருந்துசேவையை உயா்கல்வித்துறை அமைச்சா் கோவி.செழியன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image
திருவிடைமருதூா் அருகே சித்தாலத்தூா் கிராமத்துக்கு பேருந்து சேவையை புதன்கிழமை தொடங்கிவைத்த உயா்கல்வித்துறை அமைச்சா் கோவி.செழியன்.
Updated On :24 டிசம்பர் 2025, 8:44 pm

தினமணி செய்திச் சேவை

திருவிடைமருதூா் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள சித்தாலத்தூா் கிராமத்துக்கு நீட்டிக்கப்பட்ட பேருந்துசேவையை உயா்கல்வித்துறை அமைச்சா் கோவி.செழியன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து கீரனூா் வரை நகரப் பேருந்து ஏ.13 நான்கு நடைகள் இயக்கப்பட்டது. தற்போது அந்தப் பேருந்தை சித்தாலத்தூா் கிராமத்துக்கு நீட்டிப்பு செய்து பேருந்து சேவையை உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் புதன்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

நிகழ்வில், முன்னாள் எம்.பி செ. இராமலிங்கம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் மண்டல துணை மேலாளா் எஸ். தங்கபாண்டியன், கிளை மேலாளா் எஸ். திருஞானம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.