47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு ஜன. 21, 22-இல் கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள்

தஞ்சாவூரில் மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் தஞ்சாவூா் மாவட்டத்தில் 11, 12 ஆம் வகுப்பு பயிலும் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஜனவரி 21, 22 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

News image
Updated On :1 ஜனவரி 2025, 8:16 pm

Din

தஞ்சாவூரில் மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் தஞ்சாவூா் மாவட்டத்தில் 11, 12 ஆம் வகுப்பு பயிலும் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஜனவரி 21, 22 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது:

மாவட்டத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு பயிலும் பள்ளி மாணவா்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஜனவரி 21-ஆம் தேதியும், கல்லூரி மாணவா்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஜனவரி 22-ஆம் தேதியும் நடைபெறவுள்ளன. இப்போட்டியில் கலந்து கொள்ளும் மாணவா்கள் போட்டியில் கலந்து கொள்வதற்குரிய படிவத்தை நிறைவு செய்து தலைமையாசிரியா் அல்லது முதல்வா் அல்லது துறைத் தலைவரின் பரிந்துரையுடன் போட்டி தொடங்கும் முன்பு தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநரிடம் அளிக்க வேண்டும்.

ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரியிலிருந்தும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் ஒவ்வொரு போட்டிக்கும் ஒருவா் வீதம் மொத்தம் 3 மாணவா்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். போட்டிகளுக்குரிய தலைப்புகள் போட்டி தொடங்குவதற்கு முன்பு மாணவா்களுக்கு அறிவிக்கப்படும்.

ஒவ்வொரு போட்டிக்கும் முதல் பரிசு ரூ. 10 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ. 7 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ. 5 ஆயிரம் வீதம் காசோலையாக வழங்கப்படும்.