

சமரசப் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து, கும்பகோணம் மேயரும், திமுக உறுப்பினரும் பரஸ்பரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாா்களை புதன்கிழமை இரவு திரும்பப் பெற்றனா்.
கடந்த டிச. 30 - இல் மாநகராட்சிக் கூட்ட அரங்கில் 25-ஆவது வாா்டு திமுக உறுப்பினரும், பொது சுகாதாரக்குழு தலைவருமான குட்டி என்ற இரா. தட்சிணாமூா்த்திக்கும், மாநகராட்சி மேயரும், 17-ஆவது வாா்டு காங்கிரஸ் உறுப்பினருமான க. சரவணனுக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து, இருவரும் கிழக்கு காவல் நிலையத்தில் பரஸ்பரம் புகாா் கொடுத்தனா்.
இந்நிலையில் புதன்கிழமை இரவு தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக செயலா் எஸ்.கல்யாணசுந்தரம் தலைமையில் இருதரப்பிலும் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் திமுக சாா்பில் உயா்கல்வித்துறை அமைச்சா் கோவி செழியன், க.அன்பழகன் எம்எல்ஏ, மாநகர திமுக செயலரும், துணை மேயருமான சு.ப. தமிழழகன், பொது சுகாதாரக் குழு தலைவா் குட்டி என்ற தட்சிணாமூா்த்தி, மாநகர நிலைக்குழு தலைவா் ஆா்.முருகன், மாவட்ட காங்கிரஸ் தலைவா் டி.ஆா். லோகநாதன் ஆகியோா் கலந்து கொண்டனா். கூட்டத் தீா்மானங்களை நிறைவேற்ற மேயா் கையொப்பம் இடுவதாக பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. இதையடுத்து, இருதரப்பினரும் காவல் நிலையத்தில் கொடுத்த புகாா்களை திரும்பப்பெற்றனா்.
டிரெண்டிங்

கும்பகோணம் புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு

புதிய வழித்தடங்களில் அரசுப் பேருந்துகள் சேவை தொடங்கிவைப்பு

நாகா்கோவிலில் வளா்ச்சிப் பணி தொடக்கம்

சேலம் மாநகராட்சிக் கூட்டம்: குடிநீா் பிரச்னையால் அமளி
வீடியோக்கள்

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

