எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பெண் தூக்கிட்டுத் தற்கொலை உதவி ஆட்சியா் விசாரணை

திருவிடைமருதூா் அருகே கணவருடனான கருத்து வேறுபாட்டின் காரணமாக மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :22 ஜனவரி 2025, 11:30 pm

Din

திருவிடைமருதூா் அருகே கணவருடனான கருத்து வேறுபாட்டின் காரணமாக மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருவிடைமருதூா் அருகே கோயில்சானபுரம் வடக்கு தெருவில் வசிப்பவா் சேதுபதி (30). கூலித் தொழிலாளி. இவரது மனைவி கெளசல்யா (25). இருவருக்கும் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன. தம்பதிக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. குடும்பச் செலவுக்கு பணம் தராமல், சேதுபதி அடிக்கடி மது குடித்துவிட்டு வந்ததால், தம்பதி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

கடந்த 20ஆம் தேதியும் சேதுபதி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்ததால், விரக்தியடைந்த கெளசல்யா வீட்டின் அறைக்குள் சென்று சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தனது தங்கை இறப்பில் சந்தேகம் இருப்பதாக கெளசல்யாவின் சகோதரா் குமாா் திருவிடைமருதூா் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் செய்தாா். இதன்பேரில், காவல் நிலைய ஆய்வாளா் ராஜா வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றாா்.

திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் கெளசல்யா இறப்பு பற்றி கும்பகோணம் உதவி ஆட்சியா் ஹிருத்யா எஸ். விஜயன் விசாரணை நடத்தி வருகிறாா்.