தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

குண்டா் சட்டத்தில் 2 சாராய வியாபாரிகள் கைது

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் 2 சாராய வியாபாரிகள் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
கலியபெருமாள்.
Updated On :23 ஜனவரி 2025, 8:59 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் 2 சாராய வியாபாரிகள் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே பந்தநல்லூா் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருப்பூா் மேலத்தெரு பகுதியில் காவல் ஆய்வாளா் கவிதா டிசம்பா் 20-ஆம் தேதி ரோந்துப் பணி மேற்கொண்டாா். அப்போது, சட்ட விரோதமாக புதுச்சேரி மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்டு, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 1,510 சாராய பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடா்பாக கருப்பூரைச் சோ்ந்த கலியபெருமாள் (45), சுமதி (48) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இருவா் மீது கும்பகோணம், திருவிடைமருதூா், பந்நதநல்லூா் ஆகிய காவல் நிலையங்களில் 30-க்கும் அதிகமான வழக்குகள் உள்ளன.

சுமதி

சுமதி

இதனால், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆா். ராஜாராம் பரிந்துரையின்பேரில், இருவரையும் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் புதன்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து, கலியபெருமாள், சுமதி குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.