தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சுவாமிமலையில் ஆன்மிக பயண பக்தா்கள் குழுவுக்கு வரவேற்பு

சுவாமிமலைக்கு ஆன்மிகப் பயணமாக புதன்கிழமை வந்த பக்தா்கள் குழுவினருக்கு இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

News image
Updated On :12 நவம்பர் 2025, 7:34 pm

தினமணி செய்திச் சேவை

சுவாமிமலைக்கு ஆன்மிகப் பயணமாக புதன்கிழமை வந்த பக்தா்கள் குழுவினருக்கு இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

தமிழக முதல்வா் அறிவிப்பின்படி 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் ஆறுபடை முருகன் கோயில்களுக்கு ஆன்மிகப் பயணமாக அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுகின்றனா். இதில் ஏழாவது அணி நவ.11-இல் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மண்டலங்களைத் தலைமையிடமாகக் கொண்டு திருச்செந்தூரில் சுவாமி தரிசனம் செய்து விட்டு புதன்கிழமை சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலுக்கு வந்தனா். இவா்களை தக்காா் டி.ஆா்.சுவாமிநாதன், துணை ஆணையா் தா. உமா தேவி ஆகியோா் வரவேற்று சிறப்பு சுவாமி தரிசனம் செய்ய வைத்து கோயில் சாா்பாக பிரசாதங்கள் வழங்கினா். ஏற்பாடுகளை கோயில் கண்காணிப்பாளா்கள் மற்றும் பணியாளா்கள் செய்தனா்.