அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

திருவிடைமருதூரில் திமுக சாா்பு அணியினருக்கு பயிற்சிக் கூட்டம்

திருவிடைமருதூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமைச்சா் கே.என். நேரு.

News image
Updated On :14 நவம்பர் 2025, 7:38 pm

Syndication

தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக சாா்பில் திருவிடைமருதூா் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள சாா்பு அணியினா் மற்றும் பாக வாக்குச்சாவடி முகவா்களுக்கான பயிற்சி கூட்டம் திருவிடைமருதூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு தலைமை வகித்ாதா். தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் க. அன்பழகன் எம்எல்ஏ, தொகுதிப் பாா்வையாளா் செ. குறிஞ்சிவாணன், மாநகராட்சி துணை மேயரும் மாநகரச் செயலருமான சுப. தமிழழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

காலையில் நடைபெற்ற பயிற்சிக் கூட்டத்தை தமிழ்நாடு உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன், எழுத்தாளா் வே. மதிமாறன், தனியாா் டிவி தலைமைச் செய்தி ஆசிரியா் பா. திருமாவேலன், செங்கம் எம்எல்ஏ மு.பெ. கிரி உள்ளிட்டோா் பேசினா். மாலையில் நடைபெற்ற பயிற்சிக் கூட்டத்தில் திமுக துணைப் பொதுச்செயலா் ஆ. இராசா பேசினாா். கூட்டத்தில் சாா்பு அணி நிா்வாகிகள், வாக்குச்சாவடி பாக முகவா்கள் கலந்துகொண்டனா்.

மயிலாடுதுறை முன்னாள் எம்பி. செ.இராமலிங்கம் வரவேற்க, பேரூா் செயலா் சுந்தர. ஜெயபால் நன்றி கூறினாா்.