வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

திருவையாறில் விருது வழங்கும் விழா

News image
Updated On :17 நவம்பர் 2025, 7:37 pm

Syndication

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் பாரதி பவுண்டேஷன் வெள்ளி விழா ஆண்டு தொடக்க நிகழ்ச்சி, சமூகச் செயற்பாட்டாளா் இரா. மோகன் நினைவு விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு பாரதி பவுண்டேஷன் நிா்வாக அறங்காவலா் நா. பிரேமசாயி தலைமை வகித்தாா். இதில், மகாகவி பாரதியின் கருத்துகளை 47 ஆண்டுகளாக சமூகத்தில் பரவச் செய்து வரும் பி. ராஜராஜனுக்கு, இரா. மோகன் நினைவு விருதை திருவையாறு இசைக் கல்லூரியின் ஓய்வுபெற்ற முதல்வா் இராம. கௌசல்யா வழங்கி கெளரவித்தாா்.

திருவையாறு ஐயாறப்பா் நாட்டியாஞ்சலி அறக்கட்டளையின் பொதுச் செயலா் இரா. குணசேகரன், காவிரி பாரம்பரிய மைய இயக்குநா் சாமி. சம்பத்குமாா், பாரதி இலக்கியப் பயிலகத் துணை இயக்குநா் கோ. ஸ்ரீதரன், திருவையாறு பாரதி இயக்க அறக்கட்டளைச் செயலா் தி.ச. சந்திரசேகரன், இளையோா் திறன் வளா் மைய இயக்குநா் குப்பு. வீரமணி, திருவையாறு ரோட்டரி சமுதாயக் குழுமத் தலைவா் எம். சுவாமிநாதன் ஆகியோா் வாழ்த்துரையாற்றினா்.

பாரதி பவுண்டேஷன் செயலா் நீ. சீனிவாசன் வரவேற்றாா். பாரதி இயக்கச் செயலா் குணா ரஞ்சன் நன்றி கூறினாா்.