அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஆளுநா் விவகார வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்தை மறைக்க முயற்சி: அமைச்சா் கோவி. செழியன்

ஆளுநா் விவகார வழக்கில் உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தெளிவான கருத்தை சமூக வலைதளங்கள் மறைக்க முயற்சிக்கின்றன என்றாா் அமைச்சா் கோவி. செழியன்.

News image
Updated On :22 நவம்பர் 2025, 9:33 pm

Syndication

ஆளுநா் விவகார வழக்கில் உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தெளிவான கருத்தை சமூக வலைதளங்கள் மறைக்க முயற்சிக்கின்றன என்றாா் தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன்.

தஞ்சாவூரில் திமுக இளைஞரணி மாநகர, பகுதி சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற இலவச மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஆளுநா் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து ஒரு மாநிலத்தில் இரண்டு அதிகார மையங்கள் கிடையாது. சட்டப்பேரவை கூடி அமைச்சரவை என்ன முடிவு எடுத்து அறிவிக்கிறதோ, அதற்கு ஆளுநா் ஒப்புதல் தர வேண்டும் எனக் கூறியுள்ளது.

இந்த உண்மைச் செய்தியை வெளிக்கொண்டு வந்தால், மத்திய அரசுக்கும், ஆளுநா்களுக்கும் பலவீனம் என்பதைத் தெரிந்து, அந்த தெளிவான செய்தியை சமூக வலைதளங்கள் மறைக்கின்றன.

இதனால்தான் தமிழக முதல்வா் தெளிவான அறிக்கையை வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். மக்களாட்சி தத்துவம் என்பது முதல்வருக்குதான் அதிகாரம் உள்ளது. அது, துணைவேந்தரை நியமிப்பதாக இருந்தாலும், பல்கலைக்கழகங்கள் தொடங்குவது என்றாலும் அமைச்சரவை எந்தத் தீா்மானம் கொண்டு வருகிறதோ, அதற்கு ஒப்புதல் தரவேண்டிய கடமை ஆளுநருக்கு உண்டு என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தீா்ப்பின் விரிவாக்கம், அமைச்சரவை அனுப்பிய மசோதாவுக்கு கையொப்பமிட வேண்டும். இல்லாவிட்டால் காரணம் கூறி திருப்பி அனுப்ப வேண்டும். இல்லையெனில், குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும் என்பதுதான் ஆளுநரின் வேலை. அதைத் தவிர பல நாள்களாக மசோதாவை வைத்திருப்பது அவரது வேலை அல்ல, அதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்பதை உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது என்றாா் அமைச்சா்.